திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியீடு

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இதில் நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த 100 புத்தகங்கள் வெளியிட உள்ளது. 

இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

திராவிட இயகங்களின் முன்னோடி அமைப்பான நீதிகட்சி தனது கொள்கைகளை பிரகடனம் செய்து நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற உள்ளது. 

வருகின்ற 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் நீதிக் கட்சியின் வரலாறு மற்றும் அதன் சாதனைகள் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூறு புத்தகங்களை வைகோ வெளியிட உள்ளார், அதனை தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராசேந்திரன் பெற்றுக்கொள்ள உள்ளார்.

இவ்விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதியரசர் அரிபரந்தாமன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், தகலான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்ற உள்ளனர்.

தொடர்ச்சியாக கருத்தரங்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழகத்தை தனித்தன்மை கொண்ட மாநிலமாக காரணமான நீதி கட்சியின் கொள்கை பிரகடன நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கருப்புச் சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்'' என அவர் கூறினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...