மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது


கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கையில் இருந்த 2 சவரன் தங்க நகை காணாமல் போயுள்ளதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீர்கான் (24) என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், இன்று (வியாழன்) சமீர்கான் காந்திபுரம் வடகோவை மேம்பாலத்தின் அருகே நடந்துகொண்டிருந்த போது அவரை காவல் துறையினர் பிடிக்க முயற்சித்துள்ளனர். இதையறிந்த அவர் தப்பியோட முயன்று மேம்பாலத்தின் மேல் இருந்து குதித்துள்ளார். இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவரை பிடித்த காவல் துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



பின் அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலாம் என்பவரது மகன் சமீர்கான் என்பதும், கேரளாவில் ஒரு உணவு விடுதியில் பணியாற்றி வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவை வந்தது தெரியவந்துள்ளது.



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...