ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அறிவியல் திருவிழாவில் முதல் பரிசு வென்றனர்


தில்லியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். 

ஸ்வச்பாரத் மற்றும் ஸ்டேடர்ஜிக் அப்லிகேசன் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் இப்பரிசினை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான்பாரதி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்தியது. இதில் 3000 இளம் விஞ்ஞானிகள், 300 கல்வி சார் துறையினர், 200 தொழில் துறையினர் என பலர் பங்கேற்றனர்.

மாணவர்கள், ஸ்வச் பாரத், பசுமை ஆற்றல், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட்டனர். இதில் மொத்தமாக மாணவர்களிடம் இருந்து 1300 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இஐஇ, இசிஎஸ், இஇஇ, சிஎஸ்இ ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் ஆர்.நித்திஷா, ஆர்.பி.ஸ்ரீநாத், கோகுல்சண்முகம், என்.ராம்விக்ணேஷ், இ.விக்ணேஷ் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகிய மாணவர்கள் முதல் பரிசுகளை பெற்றனர்.

வெற்றிபெற்றோர்க்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஸ்வர்தா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...