ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்துரையாடல்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஸ்வச்சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் பல கல்வி நிறுவனங்களில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில், ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். 



மாணவர்களின் மூலமாக ஸ்வச் பாரத் திட்டத்தினை அதிகளவில் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லமுடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் மாநகராட்சியுடன் மக்கள் ஒத்துழைப்பு தந்து அதிகபட்ச சுகாதாரத்தினை அடைய முடியும். இது ஸ்வச் சர்வேக்ஷன் 2017 விருதினை பெறவும் வழிவக்கும்.

மத்திய நகர்ப்புற  அமைச்சகத்தின் மூலம் ஸ்வச்பாரத் திட்டத்தின் கீழ் ஸ்வச்சர்வேக்ஷன் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் சுகதார அளவுகள் மற்றும் அதற்கான உள்ளாட்சி  அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சி இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நகரங்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஸ்வச்சதா செயலி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Newsletter

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...