கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உயர்நீதிமன்ற ஆணைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன்  ஆகியோர் ஒருங்கிணைந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டு அதன்படி அக்டோபர்-2016 முதல் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜா தெரு, கருப்பை கவுண்டர் தெரு, என்.எஸ்.ஆர். ரோடு, விளாங்குறிச்சி ரோடு, அவினாசி ரோடு, அவினாசி ரோடு முதல் நவ்இன்டியா சாலை இணைப்பு வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட மொத்தம் 35 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களுக்கு இடையூறாக மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் மூலம் அனைத்தும் பகுதிகளிலும் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனுமதியின்றி பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பிரதான சாலைகள்  ஆகியவற்றிலும் கண்டறிந்து விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன் தொடர்புடைய நபர்கள் மீது கடும்நடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...