பேய்கள் நடமாடும் நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனத்தை தடுக்க ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் மனு

பேய்கள் நடமாடும் இரவு 12 மணி நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனம் செய்வதை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் என்கிற வினோத் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



"வருகிற டிசம்பர் 31-ஆம் தேதியன்று இரவு புத்தாண்டு என்கின்ற பெயரில் அன்று இரவு கேளிக்கை விடுதிகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாலை விபத்துகளை ஏற்படுத்துவோர் மீதும், இதன் மூலம் கலாச்சார சீரழிவு செய்துவரும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு முடக்க வேண்டும்.

இந்து ஆகம விதிப்படி இரவு 12 மணி நேரத்தில் பேய்கள் நடமாடும் நேரத்தில் புத்தாண்டு தரிசனம் என்கிற பெயரில் தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஒரு சில கோவில்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அந்த நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது, அது நம் அழிவிற்கு காரணமாக அமையும். அதனால், இதுபோன்ற இந்து விரோத செயல்களை தடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...