தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பிக்கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் தகவல்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பிக்கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மனித உரிமை பாதுகாப்பு மாநாடு ஜனவரி 7-ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அதில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை வரவேற்பதாகவும், இது போன்ற சோதனைகள் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக பிரதமர் இதை செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் 11 பேர் நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை எனவும், இதை போல அரசு வழகறிஞர்கள் நியமனம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பணி நியமனங்கள் நியமனம் செய்யும் போது  ஆளும் கட்சி உறுப்பினர்களாக இல்லாமல் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் புதிதாக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட 83 பேர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் பல்கலைக் கழகம் அவர்களது இணைய தளத்தில் பணி நியமனம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களை  நேரில் சென்று சந்திப்பது தவறானது எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உள்ளிட்ட உடைமைகளை திருப்பிக்கொடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...