வீட்டிற்குள் கார் நுழைந்து 5 பேர் காயம்- காரை ஓட்டியவர் தலைமறைவு

கோவை வடவள்ளியில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள அஜ்ஜனூரில் சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வடவள்ளியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று அஜ்ஜனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.



இந்த விபத்தில் அங்கிருந்த காளிமுத்துவின் தாய் லட்சுமி (60), மருமகள் சரஸ்வதி (35), பேத்திகள் சங்கீதா (12), உதயசங்கரி (9) மற்றும் ரங்கநாதன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர்  சித்ரா மற்றும் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை பரிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது சுண்டபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...