மோசடி, நம்பிக்கை மோசடி என இருபிரிவில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் மீது வழக்கு பதிவு

கோவையை சேர்ந்த பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் மீது மோசடி, நம்பிக்கை மோசடி என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி கவுண்டர். விவசாயியான இவர் தனது மகள் ஞானசௌந்தரியை கடந்த 2009 ஆம் ஆண்டு பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஞானசௌந்தரி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே மகளின் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் நகைகளை திருப்பி வழங்குமாறு சுந்தரசாமி கவுண்டர் முருகானந்தத்திடம் முறையிட்டுள்ளார். 

ஆனால், அதற்கு முருகானந்தம் உரிய பதிலளிக்காததால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அலைகழிக்கப்பட்டதால் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுந்தரசாமி மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம், அவரது தந்தை பழனிசாமி கவுண்டர், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக பாதிக்கப்பட்ட சுந்தரசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...