பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, 50 நாட்களில் பிரச்சனைக்கள் தீர்க்கப்படும் எனக்கூறி இருந்தது ஆனால் ஐம்பது நாட்கள் கடந்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், பிரதமர் மோடியின் வாக்குறுதி பொய்யாகி விட்டாதகவும் கூறி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடன் நிலுவை வைத்திருக்கும் கார்பெரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் மைக்கை பிடுங்கியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் மற்ற கட்சிகள் பிளகஸ் பேனர்கள் வைத்தாலும் காவல்துறை கண்டுகொள்வதில்லை எனவும்,மக்களுக்காக போராடும் கட்சிகளிடம் மட்டுமே காவல்துறை அடக்குமுறைகளை கையாளுவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...