ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் கட்டண பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாரதீய போக்குவரத்து ஆட்டோ, டெம்போ, மினிடோர் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்ட மீட்டர் கட்டணமான குறைந்தளவு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30, அடுத்து வருகிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.15ம் அரசு வழங்கினால் அந்த கட்டணத்தை அமல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களும், தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளோம்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையில் தமிழக அரசு பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் வகையில் இந்த தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீட்டர் கட்டணத்தை நீதிமன்றம் அறிவித்தபடி தொழிற்சங்கத்தை அழைத்து பேசி உடனே கட்டணத்தை முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சென்னைக்கு அறிவித்தது போல் தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்திய மீட்டர் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தாலும், கோவை மாவட்டத்தில் அதிகமான ஆட்டோக்கள் இருப்பதாலும் ஆட்டோக்களுக்கு வழங்கும் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...