அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய அ.தி.மு.க-வினர் கோவையில் ஜெ-தீபா பேரவை துவங்கினர்


அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனிடையே சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென, அக்கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை அமைப்பை துவக்கினர். சசிகலா தலைமையை ஏற்க பிடிக்காததால் அ.தி.மு.க வில் இருந்து விலகி இந்த அமைப்பை துவக்கி இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டுமெனவும் ஜெ-தீபா பேரவையினர் தெரிவித்தனர். 

அ.தி.மு.க வில் சசிகலா மற்றும் தீபா ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருவது, அக்கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...