பிரதமர் மோடியின் அறிவிப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மாவட்ட எஸ்ஐஇஎம்ஏ அமைப்பு


2017 புத்தாண்டை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு சில சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.

அதில், நகர்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடுகட்டும் திட்டத்தில் 3 சதவிகித வட்டியில் ரூ.12 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.

மோடியின் இந்த அறிவிப்பு பொருளாதார நெருக்கடியில் தொழில்துறையினர் தவித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் இத்தகைய சிறப்புத் திட்டங்கள் பாராட்டுக்குறியவை என தென்னிந்திய தொழில்நுட்ப உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...