மருத்துவர்களின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்


கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மகன் உயிரிழந்ததாகவும், இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகேயுள்ள சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் பிரதீப் குமார் (20). இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள எல்லன் தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

மருத்துவர் செலுத்த வேண்டிய ஊசியியை செவிலியரை செலுத்துமாறு கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டதால் பிரதீப்பிற்கு சிறிது நேரத்தில் உடம்பு தூக்கிவாரி போட்டதாகவும், அப்போது செவிலியர்கள் மருத்துவர்களை அழைத்தும் மருத்துவர்கள் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பிரதீப் என்ன காரணத்தால் அவதிபடுகிறார் என்பது குறித்து மருத்துவர்கள் பரசோதிக்காமல் சென்றுவிட்டதால், சிறிது நேரத்தில் மருத்துவர் ஒரு ஊசி போட்ட பின்னர் பிரதிப்பிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கீழே விழுந்த நிலையில், பிரத்தீப்பின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த மருத்துவ அறையில் இருந்த தொலைபேசி, கதவு மற்றும் கண்ணாடியை உடைத்ததுடன் எல்லன் மருத்துவமனையின் நிறுவன மருத்துவர் இராமசந்திரனை தாக்கி உள்ளனர். 

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்த மருத்துவர்கள் காவலர்கள் உதவியுடன் பிரதீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணமாகவே தன் மகன் உயிரிழந்ததாகவும், சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எல்லன் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கையில், பிரதீப் வாந்தி எடுக்கும் போது மூச்சு குழாயில் உணவு துணுக்குகள்  அடைத்து சுயநினைவு இழந்ததாகவும், அதற்காகவே தீவிர சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதீப்பின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது உறவினர்களும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...