அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியதாரர்கள்


அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 5 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மாதத்திற்கான ஓய்வூதியம் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படாத நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ஓய்வூதியத்திற்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அதன் வாயிலின் முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், உடனடியாக ஓய்வூதியம் வழங்காதபட்சத்தில் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...