பெண்களிடம் தரக்குறைவாக நடந்துவரும் மைக்ரோ பைனான்ஸ் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தவனை செலுத்த அவகாசம் கேட்ட பெண்களிடம் அவமரியாதையாக பேசிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் பத்து பேர், இருபது பேர் என்று மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று மாதமாதம் தவனை செலுத்தி வருகின்றனர். 

இதனிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இதுவரை முறையாக பணத்தை கட்டிய கடன் பெற்ற பெண்கள் தற்போது உரிய தேதியில் பணத்தை கட்ட முடியாமல் சிரமப்படுவதால் உரிய நேரத்தில் செலுத்த முடியாத சூழல் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசுவதாக கூறி கடன் பெற்ற பெண்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் பெண்களிடம் தரக்குறைவாக பேசியதாகவும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசி வருகிற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் இணைந்து பெண்கள் இன்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...