பெண்களிடம் தரக்குறைவாக நடந்துவரும் மைக்ரோ பைனான்ஸ் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தவனை செலுத்த அவகாசம் கேட்ட பெண்களிடம் அவமரியாதையாக பேசிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் பத்து பேர், இருபது பேர் என்று மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று மாதமாதம் தவனை செலுத்தி வருகின்றனர். 

இதனிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இதுவரை முறையாக பணத்தை கட்டிய கடன் பெற்ற பெண்கள் தற்போது உரிய தேதியில் பணத்தை கட்ட முடியாமல் சிரமப்படுவதால் உரிய நேரத்தில் செலுத்த முடியாத சூழல் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசுவதாக கூறி கடன் பெற்ற பெண்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் பெண்களிடம் தரக்குறைவாக பேசியதாகவும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசி வருகிற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் இணைந்து பெண்கள் இன்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...