பிரபல தங்க நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் ராஜவீதி பகுதியில் முத்ரா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்கநகைக் கடை மற்றும் முத்ரா புல்லியன்ஸ் என்ற பெயரில் தங்கக்கட்டி விற்பனையும் செய்து வருகிறார். 

இந்த நிலையில் சிவகுமார் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சிவகுமாரின் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, வியாபாரம், பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்குப் பின் வரி செலுத்தியது மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அங்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், வருமான வரி தொடர்பான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சேகர்ரெட்டி, முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை கடையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...