எல்லன் மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு

கோவை காந்திபுரம் எல்லன் மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள எல்லன் மருத்துவமனையில் புதனன்று சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பிரதீப்குமார் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்தார் எனக் கூறி அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததுடன், மருத்துவர் ராமசந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க கோவை கிளை நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், மருத்துவமனை தரப்பில் தவறுகள் நடந்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதனிடையே, இறந்த பிரதீப்குமாரின் உடல் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...