உதவி பேராசிரியை கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரித்து கொலை- காவல் துறை தீவிர விசாரணை


கோவை அருகே இருகூரில் உதவி பேராசிரியை லதா, அவரது  வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் லதா. இவரது கணவர் சிவலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை இருகூர் ஐ.ஓ.பி காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை லதாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்பவர் லதாவின் வீட்டிற்கு சென்ற போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் லதா இறந்து கிடந்துள்ளார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே சாம்பார் பொடி தூவப்பட்டு இருந்ததும், உதவி பேராசிரியரை லதா நிர்வாண நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரை கற்பழித்து கொலை செய்து பின் எரித்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர். 

மேலும், இறந்த பேராசிரியையின் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருடப்பட்டு இருக்கின்றதா என்பது குறித்தும், வீட்டிற்கு யார் வந்து சென்றுள்ளார்கள் என்பது குறித்தும் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...