மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 30 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி காப்பீட்டு ஊழியர்கள் குற்றச்சாட்டு


மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி அமைப்பினர், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு கொள்கையை கண்டித்து எல்ஐசி காப்பீட்டு ஊழியர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலக வாளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பில் இது வரை சரியான தீர்வு கிடைக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதல் பெட்ரோல் பங்க், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பழைய நோட்டுகள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது, ஆனால் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

இதனால் எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ள 30 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...