கோவை அருகே குளத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் - விரட்டும் பணியில் வனத்துறையினர்


கோவை அருகே குளத்தில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் யானைகள் விரட்டியதில் வெள்ளியங்கிரி என்ற வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது  மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் கோவை வனப்பகுதியில் மனித மிருக மோதல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தீத்திபாளையம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய 5 காட்டு யானை கூட்டம் அருகில் இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, இதனையடுத்து அங்கிருந்து செட்டிபாளையம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அருகில் உள்ள குளத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. குட்டி உட்பட 5 யானைகள் குளத்தில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தை தொடர்ந்து அங்கு வந்த கோவை சரக வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டு யானைகள் வனத்துறையினரை தாக்க முற்பட்டது. இதனால் வனத்துறையினர் சிதறி ஓடுகையில் வெள்ளியங்கிரி என்ற வன காவலர் கீழே விழுந்தில் தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் குளத்தில் உள்ள 5 யானைகளை விரட்டுவது குறித்து வனத்திறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பகல் நேரம் என்பதால் யானைகளை விரட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மாலை நேரத்தில் யானைகளை விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...