எஸ்.என்.எஸ் கல்லூரியில் தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் "உயர் கல்வி தரம்" குறித்து கலந்துரையாடல்

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "உலகளாவில் கல்வி முறை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்" தொடர்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையம்மாள் ஹாலில் இன்று நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கமாக அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் சர்வேதேச அளவில் உலகளாவிய தாக்கத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் மற்றும் கல்வி வளர்ச்சி நிலையில் உன்னத நிலையை அடைவதே ஆகும். இதில் கோயம்புத்தூர் நகரில் புகழ்பெற்ற தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை விவாதித்தனர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் "நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை" பற்றியும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் "கற்பித்தல் மற்றும் கற்றல்" குறித்தும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் "வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவு" குறித்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன் "உயர் கல்வியின் புதுமை" பற்றியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா "ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை விரிவாக்கம்" என்ற தலைப்பிலும் பேசினார். இதனை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...