பீட்டா அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

தமிழத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து, கோவை அரசு கலைக்கல்லூரியில் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பீட்டா அமைப்பின் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரியான பூர்வா ஜோஸ் புராவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டுமெனவும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேப்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட சமூக வலைதள பதிவாளர்கள், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அப்போது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...