தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை எனவும் உடனடியாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பா.ஜ.க  தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த  பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:- மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக தங்கம், உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முழு பலன் தெரிய 6 மாதம் காலம் வரை ஆகும் எனவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய காரணமாக இருந்தது சோனியா காந்தி, கருணாநிதி, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய மூவர் மட்டுமே என குற்றம் சாட்டிய அவர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக் கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதென்றால் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வீட்டின் முன் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர், மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

வரவிருக்கும் பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ப.சிதம்பரத்தின் பேச்சுக்கள் அவர் எப்படி நிதியமைச்சராக பணியாற்றினார் என்பதை கேள்விக்குறியாக்குவதாகவும் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...