மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட குறைந்தபட்ச கூலியை வழங்கக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய துப்புரவாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும். மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். நிரந்திர பணிக்கு ஆட்களை எடுக்கும்போது ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கப்படவேண்டும்.

அதேபோல துப்புரவு பணிகளில் ஈடுபடுகிற ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாயை மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துமட்ட ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஒத்தக்கால்மண்டப பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் தராமல் நிர்வாகம் இழுத்தடித்தது. இதனை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வோடு வழங்கப்பட்டது. 

இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதி தொழிலாளர்கள் மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...