அதிக கட்டணம் வசூலித்த கட்டண கழிப்பிட குத்தகைதாரர் உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம், வார்டு எண் 54-க்குட்பட்ட காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து குத்தைகைதாரர் செலுத்தியுள்ள வைப்புத் தொகையை பறிமுதல் செய்து குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் மத்திய மண்டலம், வார்டு எண் 54-ற்குட்பட்ட காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில் குத்தைகைதாரர் வேலுச்சாமி என்பவர் கட்டண கழிப்பிடத்தின் ரூ.1 கட்டணம் வசூல் செய்யாமல், அதற்கு பதிலாக ரூ.3 கூடுதல் கட்டணம் வசூல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

மேலும், இந்த குத்தகைதாரரை பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிக கட்டணம் வசூலித்ததால் குத்தைகைதாரர் வேலுச்சாமி என்பவர் செலுத்தியுள்ள வைப்புத் தொகையை பறிமுதல் செய்து குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், இது போன்ற மாநகராட்சியின் கட்டண கழிப்பிட கட்டணங்கள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடங்களில் மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர்கள் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...