இராஜ வீதியில் மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து


கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் 83-வது வார்டுக்குட்பட்ட இராஜ வீதிலுள்ள மாநகராட்சி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அப்பணிக்கு மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணியில் இல்லாமல் அலுவலக முன்அனுமதியின்றி விடுப்பில் சென்ற மாநகராட்சி பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை அன்று (10.01.2017) எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வரகனத்திற்கு ரூ.20 கூடுதல் கட்டணம் வசூல் செய்த குத்தகைத்தாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அப்பணிக்கு மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணியில் இல்லாமல் இருப்பதாக புகார் பெறப்பட்டதையடுத்து உதவி வருவாய் அலுவலர், சிறப்பு வரி ஆய்வாளர் மற்றும் வரி வசூலர் ஆகியோர் அன்று 09.01.2017 மற்றும் 10.01.2017 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும், இவ்வலுவலகம் மூலம் மாநகராட்சி பணியாளர் செல்வக்குமார் மற்றும் 3 தனியார் பணியாளர்கள் என நான்கு பணியாளர்கள் வசூல் பணியினை மேற்கொண்டனர். ஆனால் 4 நபர்களும் வெளியூர் செல்வது தொடர்பாக அலுவலகத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், மேற்படி 4 பணியாளர்களும் இவ்வலுவலக அனுமதியின்றி அவர்களே மூன்று தனியார் பணியாளர்களை பணியில் அமர்த்தி இருந்தனர். இதனால் மாநகராட்சி பணியாளர் செல்வக்குமார் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...