தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்துக்கு மூன்று தங்க பதக்கங்கள்


கோவையில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77 வது தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைகழகங்களை சேர்ந்த 2,605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் நாளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான தேர்வு சுற்றுகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மும்முறை தாண்டுதல், 100 மற்றும் 800 மீட்டர் ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 



இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீராங்கனைகள் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சேர்ந்த அன்பரசி என்னும் மாணவி மும்முறை தாண்டும் போட்டியில் தங்க பதக்கத்தையும், மெட்ராஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரியா என்னும் வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடிய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை  சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் சிறப்பாக விளையாடி  தங்க பதக்கத்தையும், அடுத்த இடத்தை பிடித்த மதுரை காமராஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த ரேவதி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...