கோவை எட்டிமடை பகுதியில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தையம்

கோவை எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, தடையை மீறி ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா ஊர்வலம் நடத்தினர்.


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டு போட்டிகளான ஐல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை மீதான தடை காரணமாக நாட்டு மாடுகள் அழிய வாய்ப்பிருப்பதாகவும், பீட்டா அமைப்பை தடை செய்வதுடன் ஐல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரேக்ளா ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில், தடையை மீறி நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். 



இதையடுத்து தடையை மீறி 50 க்கும் ரேக்ளா வண்டிகளில் 4 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா ஊர்வலம் நடத்தப்பட்டது. எட்டிமடை பகுதியில் துவங்கிய ரேக்ளா ஊர்வலம் கிராம பகுதிகள் வழியாக சென்று மீண்டும் எட்டிமடை பகுதியை அடைந்தது. தடையை மீறி ரேக்ளா ஊர்வலம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...