கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்களின் கையெழுத்து மற்றும் சுயமி பிரச்சாரம் இயக்கம்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SiO) கோவை மாவட்டத்தின் சார்பாக கோவையில் உள்ள கல்லூரிகளில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக கையெழுத்து மற்றும் சுயமி பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை தலைமை தாங்கிய கோவை மாவட்ட செயலாளர் அப்துல் ஆரிப் பேசுகையில்; “இந்தியா விவசாய பூமி இங்கு வாழும் மக்களில் பெரும்பாலனோர் விவசாயம் செய்யக்கூடியவர்கள். நம் நாட்டின் முதுகெலும்பே கிராமங்களும், விவசாயமும் தான். அரிசியும், திணைகளும், காய்கறிகளும், வாழையும், தென்னையும், கரும்பும் என பார்ப்பதற்கே பச்சை பசவேன இருந்த நம் தமிழகம் இன்று காய்ந்து கருகி வந்து கொண்டிருக்கின்றது. அதன் உச்சக்கட்ட நிலை விவசாயிகளின் மரணம். ஊருக்கே உணவளித்தவர்களுக்கு இந்த அவலநிலை என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகின்றது. தமிழுக்கும், தமிழக மக்களுக்கும், அதன் கலாச்சாரத்திற்கும் மிகவும் பாரம்பரிய வரலாறு உண்டு. அதன் வரலாற்றில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையும், வீர விளையாட்டான ஏறு தழுவுதலும். 



ஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் விதமாகவும், உலகமயமாதல் சிந்தனையின் அடிப்படையில் ஏறு தழுவுதலால் ஏற்படும் காளைகளின் வளங்களை பெருக்கும் திட்டத்தைக் குறைக்கும் விதமாகவும் ஏறு தழுவுதலுக்குத் தடை விதித்துள்ளதை வைத்து அரசியல் செய்யும் மத்திய பி.ஜே.பி அரசு இரட்டை முகத்தை கடைபிடித்து வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகையினை பொது விடுமுறையிலிருந்து எடுக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியதும் பி.ஜே.பி அரசின் மாநில ரீதியிலான கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் புறக்கணித்து ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் அதிகார வர்க்கப் போக்கினை காட்டுவதாக உள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இந்நிகழ்வு மாணவர்கள் மத்திய அரசின் பக்கம் இல்லை விவசாயிகளின் பக்கம் என்பதை உணர்த்தவே என்றும் குறிப்பிட்டார்.



மேலும், கோவை மாவட்ட கல்வி வளாக செயலாளர் முகமது ஆஷிக் கூறுகையில் “மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் குடும்ப மறு வாழ்விற்கும், விவசாயிகளின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அவர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் விதமாகவும் குறிப்பிட்ட அவர்களின் விவசாய நிலத்திற்கு நீர் வரத்தினை உறுதிப்படுத்தும் விதமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் மக்கள் புரட்சிதான் தீர்வு” என்றார்.



கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களின் கையெழுத்துகளை விவசாயிகளுக்காக பதிவு செய்தனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...