பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.க.வினர் கைது


தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குவது பவானி ஆறு. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரள மாநிலம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு வரும் இந்த ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து தற்காலிகமாக கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியிலிருந்து 30 வது கிலோ மீட்டர் தொலைவில் பாலக்காடு மாவட்டம்  அட்டப்பாடி அடுத்த தாவளம் செல்லும் சாலையில் தேக்கோட்டை எனும் இடத்தில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் முதல்கட்ட பணியை துவங்கியுள்ளது கேரள அரசு. அதற்காக ஜல்லி, மணல், உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அங்கு குவித்துள்ள கேரள அதிகாரிகள்  ஜே.சி.பி இயந்திரத்தையும் நிறுத்தி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து க.க.சாவடி பகுதியில் ம.தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கேரள அரசு பேருந்தை வழி மறித்ததுடன் ம.தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முல்லைப்பெரியாறு, சிறுவானி ஆறு, பவானி ஆறு என தொடர்ந்து நீராதார பிரச்சிணைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...