மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், இரும்பறை பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 264 பயனாளிகளுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமில் நடைபெற்றது. இம்முகாமில் அப்பகுதி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய  மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதேபோல், இம்முகாமில் பெறப்பட்டுள்ள 129 மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு ஆணை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, நலிந்தோர் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு நிதியுதவி, 75 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 130 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு இடு பொருட்கள், 9 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 264 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி, பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என முகாமில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, சமூக பாதுகாப்புத்திட்டத் தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...