கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்


ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவது தீபாவின் நோக்கம் அல்ல எனவும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை மீட்பது மட்டுமே அவரது நோக்கம் என தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.



ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா விரைவில் புதிய கட்சியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் கூறும் போது ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக தீபா புதிய கட்சியை துவங்கவில்லை எனவும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளே போதும் எனவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவையும் அதன் சின்னமான இரட்டை இலையை மீட்பதுமே புதிய கட்சி துவங்குவதற்கான நோக்கம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

கட்சிக்கு வர அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்வமாக இருப்பதாகவும் கட்சி துவங்கிய பின்னர் பல மூத்த தலைவர்கள் கட்சியில் இணைவார்கள் எனவும்  அவர் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 4 லட்சம் பேர் இதுவரை புதிய கட்சியில் இணைந்துள்ளதாக கூறிய அவர் தமிழகம்  முழுவதும் எவ்வளவு பேர் இணைந்துள்ளனர் என்ற கணக்கை விரைவில் வெளியிட  உள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வெளியிட்ட அவர் கோவை மாவட்ட நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அதிமுகவின் தலைமை மையமான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வந்ததை அடுத்து முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் எதிர்தரப்பான தீபா தரப்பு உறுப்பினர் சேர்க்கை வரை விரைவாக செயல்படுவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...