ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் பத்திரிகையாளர்கள் பேரணி

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை உடனடியாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு மீது நீதிமன்றம் விதித்துள்ள தடையினை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டினை எதிர்த்து தமிழர்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் உட்பட தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அனைத்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி, கோவை இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வஉசி மைதானம் சென்றடைந்தது.

இப்பேரணியின் போது பத்திரிகையாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்கி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பியபடி பேரணி சென்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...