மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலும் மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிம இனங்களுக்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 

மேலும், மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள் அறிவிப்புப் பலகையில் நன்கு தெரியுமாறு வைக்கப்பட்டு, அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே குத்தகைதாரர்கள் வசூல் செய்ய வேண்டும். 

மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குத்தகை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...