ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவையில் மக்கள் ஆட்டோ ஊழியர்கள் பேரணி

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் ஆட்டோ சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி

 நடைபெற்றது.

இன்று மதியம் 3 மணி அளவில் மக்கள் ஆட்டோ சார்பில் நடைபெற்ற இந்த பேரணி கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில் துவங்கி வஉசி மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...