'பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து', அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவை காந்தி புரத்தில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலிபோராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலத்திற்குள் சென்று மீண்டும் அட்டப்பாடி அருகே தமிழகப்பகுதிக்குள் நுழைகின்றது. இந்நிலையில் கேரள பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இரண்டு இடங்களில் கட்டுமானப்பணிகளை துவங்கியுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்த கோரி கோவை காந்தி புரத்தில் அனைத்துகட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக ,கொங்குநாடு ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள், தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டதின் போது பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பவானி ஆற்று பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையும், விவசாய பிரச்சினையும் ஏற்படும் எனவும்  பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அணை கட்டப்படுவதை தடுக்காவிட்டால் வரும் 29ம் தேதி அனைத்து கட்சியினருடன் சென்று அணை கட்டப்படும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் அதனை தொடந்து மாணவர்களை திரட்டி கேரள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கேரள அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...