கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி உயரதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைகளில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கபட்டதாகவும் இதன் அடிப்படை விலை 3400 ரூபாய் எனவும் அதிக பட்ச விலையான 6000 சங்கங்கள் நிர்ணயித்து காசோலைகள் பெறபட்டதில் ஒன்றரை கோடி ரூபாய் வரை நிதி மோசடி நடந்துள்ளது என கூறினர்.

கூட்டுறவு சங்கங்கள் நவீன முகப்புடன் இருக்கும் நிலையில் நவீன மயமாக்குதல் என்ற பெயரில் நிதியை செயல்படுத்த உள்ளது கூட்டுறவுக்கு இழப்பு ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்றனர்.

நியாய விலைக் கடைகளில் உள்ள காலி சாக்குகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்பிருந்தும் மாநில அலவில் துணை பதிவாளர் சரகம் வாயிலாக குழுக்கள் அமைக்கபட்டு 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 350 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் சங்கங்கள் மூலமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், கணினி பராமரிப்பு என்ற பெயரில் துறை உத்தரவு இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு மாதம் 4000 ரூபாய் வரை மாதந்தோரம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்ற இந்த மோசடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு பணியாளர்கள் சுமார் 100-கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...