துணிநூல் துறையில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு


கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சி, சிறுமுகை பகுதிகளில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த செய்தியாளர்கள் பயணம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

இப்பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு சேமிப்பினை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும், ஏற்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் நலன் கருதி மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. 

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.43.09 லட்சம் மதிப்பில் 8 சதவிகிதம் அரசு மானியமும் ரூ.63.58 லட்சம் மதிப்பில் 6.5 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000-மும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.1000  வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 583 நெசவாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 

நெசவாளர் நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் உடல்நலம் காக்கும் வகையில் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்துடன் இணைந்த நெசவாளர் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு மருத்துவ நிதயுதவியாக வருடத்திற்கு ரூ.15,000 வழங்கப்படுகின்றது. 

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 11012 நபர்களுக்கு ரூ.31.29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நெசவாளர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 5 நபர்களுக்கு கொண்ட குழுமத்திற்கு ரூ.37 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 9712 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நலவாழ்வு அறக்கட்டளை மூலமாக கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளின் பள்ளி இறுதி படிப்பிற்கு பின்னர் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற படிப்பு படிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.



மேலும், நெசவாளர்கள் தங்கள் இல்லங்களிலேயே தறிகளை வைத்து தொழில் செய்ய ஏதுவாக ஒவ்வொரு வீடும் 365 சதுரஅடியில் ரூ.2.60 லட்சம் மதிப்பில் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டில் 213 சதுர அடியில் தறிக்கூடத்துடன் கூடிய வாளும் அறை, 88 சதுர அடியில் படுக்கை அறை மற்றம் 64 சதுர அடியில் சமையல் அறை அமைக்கப்படும். 

வீட்டின் வெளித்தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் சமையலறை அல்லது படுக்கை அறையினை வசதிக்கேற்ப தேவைப்படும் இடத்தில் அமைத்துக் கொள்ளும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு ரூ.12.87 கோடி மதிப்பீட்டில் 575 பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. 

மேலும், நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தகுதியுள்ள பயனாளிகள் பயன்பெற்று பொருளாதாரத்தினை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...