திருநாவுக்கரசரின் கருத்து ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கோவையில் பேட்டி

தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வினை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை யாருமே கைது செய்யப்பட வில்லை எனவும் தற்போது திருப்பூரில் கொலை செய்யப்பட்டுள்ள முத்துவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுவதாகவும் கூறினார். இறந்த முத்துவின் உடல் அருகே பிரதமர் மோடியின் படமும், பா.ஜ.க கொடியும் அவமதிப்பு செய்யப்பட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் முத்து மரணத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக  மத்திய அரசின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மாநில அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டதுடன் இதற்காக தமிழக முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, அதற்கு எதிர்மறையாக பேசுவது ஏன் என தெரியவில்லை எனவும் ஆனால் மக்களுக்கு உண்மை நிலை புரியும் எனவும் தெரிவித்தார். இதே போல தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிபப்டை ஆதாரமற்றது எனவும் தமிழிசை சவுந்திராஜன் பதிலளித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...