திருநாவுக்கரசரின் கருத்து ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கோவையில் பேட்டி

தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வினை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை யாருமே கைது செய்யப்பட வில்லை எனவும் தற்போது திருப்பூரில் கொலை செய்யப்பட்டுள்ள முத்துவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுவதாகவும் கூறினார். இறந்த முத்துவின் உடல் அருகே பிரதமர் மோடியின் படமும், பா.ஜ.க கொடியும் அவமதிப்பு செய்யப்பட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் முத்து மரணத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக  மத்திய அரசின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மாநில அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டதுடன் இதற்காக தமிழக முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, அதற்கு எதிர்மறையாக பேசுவது ஏன் என தெரியவில்லை எனவும் ஆனால் மக்களுக்கு உண்மை நிலை புரியும் எனவும் தெரிவித்தார். இதே போல தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிபப்டை ஆதாரமற்றது எனவும் தமிழிசை சவுந்திராஜன் பதிலளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...