வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடரும் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்


வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள எஸ்டேட் வழக்கறிஞர் அருண் கோவிந் என்பவரது வீட்டை சுமார் 8 யானைகள் கொண்ட காட்டு யானைக்கூட்டம் இன்று அதிகாலை 5 மணியளவில் முற்றுகையிட்டது.

 

இதில் அவரது வீட்டின் கதவை உடைத்து குட்டியானை ஒன்று உள்ளே நுழைந்ததால் மற்ற யானைகள் வீட்டின் ஜன்னல் வழியாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கிரைண்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.



 

இதைத்தொடந்து, வீட்டில் தனியாக இருந்த வழக்கறிஞர் அருண் கோவிந் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வனத்துரையினருக்கும் தகவல் தெரிவித்ததைத் தொடந்து, ஊர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர். 

தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளதால் எஸ்டேட் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

மேலும், காட்டு யானை வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான தாய்முடி, நல்லமுடி, ஆனைமுடி, ஈட்டியார் போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...