திருப்பூர் பல்லடத்தில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை வைத்து 300 கிலோ குட்கா கடத்தல் - பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை

பல்லடம் அருகே போலீசாரின் வாகன சோதனையில் புத்தம் புதிய கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை வைத்து கடத்தி செல்லப்பட்ட 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக புத்தம் புதிய கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

இந்நிலையில், அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார், சோதனை மேற்கொண்டனர். அதில், ஜெயம் பேக்கர்ஸ், மூவர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது, ஆனால், அந்த கண்டெய்னர் காலியாக இருந்துள்ளது.



இதுகுறித்து ஓட்டுனரிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.



இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தின் உள்ளே சென்று பார்த்த பொழுது வாகனத்தின் வெளிப்புறம் இருந்த நீளத்திற்கும் உள்புறம் இருந்த நீளத்தின் அளவிற்கும் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.



இதனையடுத்து, போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனை செய்ததில், வாகனத்தின் உட்புறம் 3×8 என்ற அளவில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை திறந்து பார்த்த பொழுது உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

குட்காவை கடத்தி செல்வதற்காகவே கண்டெய்னர் லாரி வாங்கி, அதில் ரகசிய அறை அமைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் லோகேஸ்வரனை (23) போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான வாகன உரிமையாளர் டைட்டஸ் என்பவரை தேடி வருகின்றனர்.



இதனிடையே ரூ.23 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 300 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தி செல்வதற்காகவே புதிய கண்டெய்னர் லாரி வாங்கி அதில் ரகசிய அறை அமைத்தது போலீசார் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...