திருப்பூரில் 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 62வயது முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை - திருப்பூர் நீதிமன்றம் அதிரடி

காங்கேயம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் பழனி (62). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழனிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...