சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலகங்களுக்கு கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.


கோவை: சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா இன்று கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கொரோனா பேரிடர் காலத்தில் பிற நாடுகளை விட நம் நாட்டின் பொது சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதற்கு ஓய்வின்றி பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் அனைவரும் முக்கிய காரணம்.

மேலும், ஒரு மருத்துவராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...