ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலக புற்றுநோய் தினமாக இன்று பிப்ரவரி 4, அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்தால் நம்மை பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அனுபவிக்கும் வலி எதனினும் ஒப்பிடமுடியாதொன்று, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் அவர்களை முழுமையானதாகவும் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், வலிகளை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.



 

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை கண்டு பரிதாப்படுவது அவர்களுக்கு முக்கியம் அல்ல மாறாக அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழவே ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையிலேயே நோயுற்ற ஒவ்வொரு வாழ விரும்புகிறார்கள். கோவை அரசு மருத்துவமனையில் தற்பொழுது 5திற்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளுக்கு ஆதரவாகவும் அவர்களை மகிழ்விக்கவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை அக்குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய புது உடைகள், விளையாட்டு பொருட்கள், இனிப்புகள் என பரிசளித்து அவர்களை மகிழ்வித்து குழந்தைகளின் முகத்தில் புன்னகையை பூக்க செய்தது.



மேலும் குழந்தைகள் பிரிவில் மற்ற நோய்க்காக சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கும் இனிப்பு விளையாட்டு பொருட்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இதற்காக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நல்ல உள்ளங்களுக்கு அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்தது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...