கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதானோருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து முபினுடன் வெடி பொருட்களை காரில் ஏற்றியவர்கள் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜமேசா முபின் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



உக்கடம், கோட்டைமேடு அடுக்குமாடி குடியிருப்பு, புல்லுக்காடு, ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.



மேலும் கோட்டைமேடு பகுதியில் வாகனத்தில் சென்றவாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...