கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தெரியும் எனக்கூறி விஏஒ வேலை வாங்கி தருவதாக ரூ.2.17 கோடி மோசடி - ஒருவர் கைது

கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தெரியும் எனக்கூறி 68 பேரிடம் சுமார் 2.17 கோடி ரூபாய் மோசடி செய்த ஆத்மா சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார். முதலில் அதிமுகவில் இருந்த இவர் , தற்போது, வ.உ.சி பேரவையின் ஓருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார்.

இவர் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார் ,எஸ்.பி. வேலுமணி ஆகியோரை தனக்குத் தெரியும் எனக்கூறி வந்துள்ளார். இந்நிலையில், தான், கிராம நிர்வாக அலுவலர் பணி உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.

அவரது பேச்சை நம்பி இதுவரை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 68 பேர் ஆத்மா சிவக்குமாரிடம் ரூ.2.17 கோடி வரை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட ஆத்மா சிவக்குமார், வேலையும் வாங்கி தராமல் பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் ரூ.8.20 லட்சம் பணம் கொடுத்த மாரிச்சாமி என்பவர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆத்மா சிவக்குமார், அவரது மனைவி சத்யபாமா, ஜெய்கிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது கோவை குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்பிரிவு போலீசார், ஆத்மா சிவக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...