உதகை முத்தோரை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

உதகை அருகேயுள்ள முத்தோரையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


உதகை:உதகை அருகே உள்ள முத்தோரைப் பகுதியில் சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது‌.

இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவு உள்ளன.

அதன் அருகே உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு சிறுத்தை மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் என 4 சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



இந்நிலையில்நேற்று இரவு இங்குள்ள வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில்வந்த இரண்டு சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ் சிறுத்தைகள்நீண்ட நேரம் இப்பகுதியில் சுற்றித் திரிந்தது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 4 சிறுத்தைகளின் நடமாட்டம் அடிக்கடி உள்ளது இப்பகுதி மக்களை பெரிதும் அச்சமடையச் செய்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...