கோவை ஆவாரம்பாளையம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்துள்ளதாக டாக்ஸி டிரைவர் புகார்

ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பியுள்ளதாக சித்தா புதூர் பகுதியைச் ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கார் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவரிடம் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்க்கு 39.90 லிட்டர் அளவில் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது அவரது வாகனம் பாதி வழியில் நின்று உள்ளது.

அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையிலே ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இது குறித்து போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...