நோய் தாக்குதல் மற்றும் போதிய விலை இல்லாததால் சாலையில் கொட்டப்படும் தக்காளிகள் - விவசாயிகள் வேதனை

கோவையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடியே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடியாகும் தக்காளிகள் மூட்டை மூட்டையாக நாச்சிபாளையம் தக்காளி சந்தையில் குவிந்து வருகிறது. இதனிடையே அண்மையில் பெய்த மழையால் தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் சந்தையில் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் விற்பனைக்கு எடுத்து வந்த தக்காளிகளை பாலத்துறை சாலையிலேயே விவசாயிகள் கொட்டிவிட்டு செல்கின்றனர்.



மேலும் ஒரு சிலர் தோட்டத்தில் போதிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விவசாயிகள் தற்போது வந்துள்ள தக்காளியை பாதிப்பு இருந்தால் அப்படியே செடியில் விடாமல் பறிக்க வேண்டும் அப்போது தான் அடுத்து வளரும் தக்காளி சரியாக வளரும்.

இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...